சிலிநெக்ஸ் 2019: இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையேயான கடற் பயிற்சி
September 8 , 2019 2111 days 543 0
இலங்கைக் கடற்படையானது 2019 ஆம் ஆண்டின் சிலிநெக்ஸ் (SLINEX) என்ற கடற் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு 2 கப்பல்களை அனுப்புகின்றது.
SLINEX 2019 என்பது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே நடத்தப்படும் இரு நாட்டுக் கடற் பயிற்சியாகும்.
2005 ஆம் ஆண்டு முதல் 6 சிலிநெக்ஸ் கடற் பயிற்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
இந்தப் பயிற்சியானது இரு நாடுகளின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கும் இப்பிராந்தியத்தில் கடற் பாதுகாப்பிற்குப் பங்களிப்பதற்கும் இரு நாட்டுக் கடற் படைகளுக்கும் உதவுகின்றது.