சீனா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் மீது பொருள் குவிப்பிற்கு எதிரான விசாரணை
May 20 , 2021 1547 days 709 0
வர்த்தக அமைச்சகமானது சமீபத்தில் சீனா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் மீது பொருள் குவிப்பிற்கு எதிரான விசாரணையைத் தொடங்கியது.
இந்த நாடுகளிலிருந்து சூரிய ஆற்றலூட்டப்பட்ட மின்கலங்கள் இறக்குமதி செய்யப்படுவதை எதிர்த்து இந்த விசாரணையானது மேற்கொள்ளப்படுகிறது.
இந்திய சூரிய ஆற்றல் உற்பத்திக் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட ஒரு மனுவைத் தொடர்ந்து வர்த்தக அமைச்சகமானது இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஆற்றலூட்டப்பட்ட மின்கலங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதைக் காட்டிலும் 15 முதல் 20 சதவீதம் வரை விலை மலிவானவையாகும்.
உள்நாட்டில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டு சூரிய ஆற்றலூட்டப்பட்ட மின்கலங்கள் தயாரிக்கும் தொழிலை இது வெகுவாக பாதிக்கிறது.
இறுதியில் உள்நாட்டில் உற்பத்தியாகும் சூரிய ஆற்றலூட்டப்பட்ட மின்கலங்களின் விலையும் இதனால் அதிகரிக்கிறது.