சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மத்திய மன்றத்தின் 13வது மாநாடு
October 14 , 2019 2122 days 679 0
மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் புது தில்லியில் சுகாதார மற்றும் குடும்பநலத் துறையின் மத்திய மன்றத்தின் 13வது மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
இதன் நோக்கம் : தேசிய சுகாதார முன்னுரிமைகள் மீது ஒரு கருத்தொற்றுமையை உருவாக்குதல்
இம்மாநாடு சுகாதார நலனின் 4 தூண்களின் மீது நடத்தப் பட்டது.
அனைவருக்குமான சுகாதார சேவை
திட்ட ரீதியிலான செயல்பாடுகள்
தரமான மற்றும் அணுகிடும் வகையிலான மலிவான சுகாதார சேவைகள்
தகுந்த உள்கட்டமைப்பு
இம்மாநாட்டின் போது ‘சுரக்சித் மாத்ரிவ ஆஸ்வாசன்’ என்ற கர்ப்பிணி மற்றும் குழந்தை இறப்புகளை முழுவதும் தடுத்தல் என்ற புதிய திட்டமும், அதற்கான வலைதளம் மற்றும் அதற்கான குறை தீர்ப்பு இணைய வாயிலும் துவங்கப்பட்டன.
மேலும் அவர் அம்மாநட்டில் பின்வரும் அறிக்கைகளையும் வெளியிட்டார்.
2019ம் ஆண்டிற்கான தேசியப் பார்வையற்ற மற்றும் பார்வைக் குறைபாட்டு ஆய்வு.
தேசிய நீரிழிவு மற்றும் நீரிழிவு காரணமான விழித்திரைப் பாதிப்பு ஆய்வின் மீதான முதல் அறிக்கை