TNPSC Thervupettagam

சுற்றுப்புறத்தை மேம்படுத்துதல் தொடர்பான சவால்

February 22 , 2021 1624 days 606 0
  • மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது சுற்றுப் புறத்தை மேம்படுத்துதல் தொடர்பான சவாலிற்காக வேண்டி 25 நகரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இது பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் செயல்படவுள்ளது.
  • இது ஒரு 3 ஆண்டு கால முன்னெடுப்பாகும்.
  • இது பொது இடங்கள், போக்குவரத்து, சுற்றுப்புறத் திட்டமிடல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு என்று ஒரு சோதனை முயற்சியாக இந்திய நகரங்கள் மற்றும் அதன் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும் இது நகர நிறுவனங்களிடையே தரவு மேலாண்மை மற்றும் ஆரம்பக் கால குழந்தை நல சேவைகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றை அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்திய நகரங்களிடையே குழந்தைகளின் ஆரம்ப காலச் சூழலை மையமாகக் கொண்ட அணுகுமுறை குறித்து பிரச்சாரம் செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்