இந்திய இரயில்வே நிர்வாகத்தின் பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் சுற்றுலா இரயில் மூலம் இரு நாடுகளை இணைக்கும் இந்தியாவின் முதல் நிறுவனமாக இந்திய இரயில்வே சமையல் சேவை மற்றும் சுற்றுலாக் கழகமானது விளங்கும்.
புது டெல்லியிலிருந்து ஸ்ரீ ராமாயண யாத்திரைச் சுற்றில் இந்த இரயில் இயக்கப்படும்.
சப்தர்ஜங் இரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இரயில் இந்தியா மற்றும் நேபாளம் இடையே சுமார் 8,000 கி.மீ. தொலைவு பயணிக்கும்.
ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட ராமாயண யாத்திரை சுற்றுப் பாதையில் இந்த ரயில் இயக்கப்படும்.