வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி 7வது சுவச் சர்வேக்சன் கணக்கெடுப்பினை புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.
சுவச் சர்வேக்சன் என்பது நகர்ப்புறத் தூய்மை குறித்த உலகின் மிகப்பெரிய ஒரு கணக்கெடுப்பாகும்.
இது சுவச் சர்வேக்சன் – நகர்ப்புற அமைப்பினால் மேற்கொள்ளப் படுகிறது.
இந்த திட்டமானது “மக்களே முதலில்” என்பதனை தனது உந்துதல் தத்துவமாக கொண்டு தயாரிக்கப் பட்டுள்ளது.
சுவச் சர்வேக்சன் 2022 திட்டமானது முன்களத் துப்புரவுப் பணியாளர்களின் நலன் மற்றும் நல்வாழ்விற்காக பல்வேறு நகரங்கள் மேற்கொள்ளும் முன்னெடுப்புகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு தொடங்கப் பட்டது.