TNPSC Thervupettagam

சுவச்தா சார்தி சமூகம்

March 9 , 2021 1611 days 744 0
  • இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் தனது அலுவலகத்தின் “கழிவிலிருந்து வளம் (சொத்து)” என்ற திட்டத்தின் கீழ் “சுவச்தா சார்தி சமூகம்” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
  • இது அறிவியல் ரீதி மற்றும் நீடித்த நிலை ஆகிய வகையில் கழிவு மேலாண்மையில் உள்ள மகத்தான சவாலைச் சமாளிப்பதில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், சமூகத் தொழிலாளர்கள் / சுயஉதவிக் குழுக்கள் மற்றும் நகராட்சி / சுகாதாரத் தொழிலாளர்கள் ஆகியோரை அங்கீகரிப்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சமூகத்தின் கீழ் வழங்கப்படும் மூன்று வகையான விருதுகள் பின்வருமாறு
  • வகை A: கழிவு மேலாண்மை சமூகப் பணிகளில் ஈடுபடும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான விருது.
  • வகை பி: கழிவு மேலாண்மை சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கான (இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள்) விருது.
  • வகை சி: சமூகத்தில் பணிபுரியும் குடிமக்கள் மற்றும் தங்கள் வேலைத் தேவைகள் / விளக்கங்களின் கீழ் குறிப்பிடப் பட்டுள்ள வரம்புகளுக்கு அப்பால் பணிபுரியும் சுய உதவிக் குழுக்கள், நகராட்சி அல்லது சுகாதாரத் தொழிலாளர்கள் ஆகியோருக்கான விருது.

கழிவிலிருந்து வளம்

  • கழிவிலிருந்து வளம் என்ற திட்டம் என்பது ஆற்றலை உருவாக்குவதற்கும் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கும் வளங்களைப் பிரித்தெடுப்பதற்கு வேண்டி கழிவுகளைச் சுத்திகரிப்பதற்கும் தேவைப்படும் தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டு,  அவற்றை மேம்படுத்த மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு உதவும் ஒரு திட்டம் ஆகும்.
  • இது பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆலோசனைக் குழுவின் (PM-STIAC - Prime Minister’s Science, Technology, and Innovation Advisory Council) ஒன்பது தேசியத் திட்டங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்