TNPSC Thervupettagam

சுவாசத்திற்கான போராட்டம் - 2019 ஆம் ஆண்டின் அறிக்கை

November 14 , 2019 2093 days 735 0
  • யுனிசெஃப் அமைப்பினால் “சுவாசத்திற்கான போராட்டம் - குழந்தைப் பருவ நிமோனியா மீதான நடவடிக்கைக்கான அழைப்பு” என்ற ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, நிமோனியா இந்தியாவில் உள்ள குழந்தைகளைப் பாதித்து, அவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்துவதில் முன்னணி வகிக்கின்றது. 2018 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 வயதிற்குட்பட்ட 14ற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • ஊட்டச்சத்துக் குறைபாடு (53%) மற்றும் மாசுபாடு (வெளிப்புறக் காற்று மாசுபாடு - 27% & உட்புற காற்று மாசுபாடு - 22%) ஆகியவற்றுடன் 2018 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,27,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்றுள்ளது.
  • குழந்தை நிமோனியா இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்ட இறப்புகள் நைஜீரியா (162,000), இந்தியா (127,000), பாகிஸ்தான் (58,000), காங்கோ ஜனநாயகக் குடியரசு (40,000) மற்றும் எத்தியோப்பியா (32,000) ஆகிய நாடுகளில் நிகழ்ந்துள்ளன.
  • நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கிற்கான உலகளாவிய செயல் திட்டத்தின் படி, 2025 ஆம் ஆண்டிற்குள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா இறப்பு விகிதத்திற்கான உலகளாவிய இலக்கானது பிறக்கும் 1000 குழந்தைகளுக்கு மூன்று ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்