பெங்களூருவில் உள்ள நுண் மற்றும் மென் ரக பொருள் அறிவியல் மையத்தின் (CeNS) அறிவியலாளர்கள் அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான பசுமை ஹைட்ரஜன் சார்ந்த சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
இது சூரிய சக்தி மற்றும் பூமியில் நிறைந்து காணப்படும் சில பொருட்களை மட்டுமே பயன்படுத்தி நீர் மூலக்கூறுகளைப் பிரிக்கிறது.
இந்தச் செயல்முறையானது புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் மிக விலையுயர்ந்த வளங்கள் இல்லாதது.
இதுவரை அறியப்பட்ட தூய்மையான எரிபொருட்களில் ஒன்றான பசுமை ஹைட்ரஜன் ஆனது, தொழிற்சாலைகளை கார்பன் நீக்கம் செய்யவும், வாகனங்களுக்கு ஆற்றல் அளிக்கவும் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேமிக்கும் திறனும் கொண்டது.