30 ஆண்டுகளுக்குப் பிறகு, மிக அருகி வரும் நிலையில் உள்ள 20 செந்தலை கொண்ட செந்நிற ஓடுடைய ஆமைகள் கங்கை நதியில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன் உயிரியல் பெயரான படகூர் கச்சுகா என்று அழைக்கப்படும் இந்த ஆமை வகையானது IUCN பட்டியலில் மிக அருகி வரும் நிலையில் உள்ளதாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.
இது ஆசியாவின் மிக அருகி வரும் நிலையில் உள்ள ஆமைகள் மற்றும் நன்னீர் வாழ் ஆமைகள் பட்டியலில் உள்ள 50 இனங்களில் ஒன்றாகும்.
இந்தியாவில், இந்த ஆமைகள் சம்பல் நதியில் மட்டுமே வாழ்கின்றன என்பதோடு கடந்த 30 ஆண்டுகளாக உலகில் வேறு எங்கும் அவை காணப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
சம்பல் நதியில், இந்தஆமைகளின் எண்ணிக்கை 300க்கும் குறைவாகவே உள்ளது.