TNPSC Thervupettagam

சென்டினலீஸ் பழங்குடியினர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள்

February 9 , 2019 2312 days 717 0
  • சென்டினலீஸ் பழங்குடியினர்களின் நல்வாழ்வு மற்றும் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்திய அரசு பல்வேறு சட்டங்கள்/ஒழுங்குமுறைகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
  • சட்டங்கள் / ஒழுங்குமுறைகள் ஒன்றியப் பிரதேசத்தினால் கண்டிப்பாக செயல்படுத்தப்படுகின்றன. இது பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும்.
    • அந்தமான் நிகோபார் தீவுகள் (பழங்குடியினரின் பாதுகாப்பு) ஒழுங்கு முறைகள், 1956
    • பட்டியலிடப்பட்ட பிரிவினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்முறைகள் தடுப்பு) சட்டம், 1989
    • வெளிநாட்டினர் செல்லத் தடை செய்யப்பட்ட பகுதிகளின் ஆணை, 1963-ன் கீழ் கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகள்.
    • விசா கையேடு நிபந்தனைகள் / கடவுச்சீட்டு சட்டம், 1920 மற்றும்
    • இந்திய வனச் சட்டம், 1927 மற்றும் வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972.
  • இவை தவிர, சென்டினலீஸ் பழங்குடியினர்களைப் பாதுகாக்க பின்வரும் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
    • உயர் கடல் நீர் பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டருடன் வட சென்டினல் முழுவதும் பழங்குடியினர் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
    • இந்திய அரசு சென்டினலீஸ் மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு மதிப்பளிக்கிறது. எனவே, சென்டினலீஸ் பழங்குடியினர்களைப் பாதுகாப்பதற்காக “முழுக் கவனம் மற்றும் கட்டுப்பாடுகள்” என்ற நடைமுறையை ஏற்றுக் கொண்டுள்ளது.
    • வட சென்டினல் தீவின் கடல் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • கடலோரக் காவல்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள், கடலில் உள்ள காவல் துறைப் படகுகள் ஆகியவை வட சென்டினல் தீவினைச் சுற்றி கண்காணிப்பினை மேற்கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்