சென்னைப் பெருநகர மாநகராட்சியானது தமிழ்நாட்டில் முதன்முதலில் தேசியப் பங்குச் சந்தையில் (NSE) தனது நகராட்சிப் பத்திரங்களை அறிமுகப்படுத்தி உள்ளது / வெளியிட்டுயுள்ளது.
கோயம்புத்தூர், திருச்சி மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களும் நகராட்சிப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதன் அடிப்படை வழங்கீட்டு அளவு தொகை100 கோடி ரூபாய் மற்றும் அதிகரிக்கப் பட்ட பங்கு விற்பனை அனுமதி (green shoe) ரூபாய் 100 கோடி ஆகும்.
கொசஸ்தலையாறு நதிப் படுகையில் ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் என்ற ஒரு திட்டத்திற்காக (ISWDP) நடைபெற்று வரும் பல்வேறு பணிகளுக்குப் பகுதியளவு நிதி அளிப்பதற்காக என மாநகராட்சியானது இந்தப் பத்திர வருமானத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள பல்நோக்கு மையத்திற்காக மாநகராட்சிப் பத்திரங்களை வெளியிடுவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருந்தது.