TNPSC Thervupettagam

செம்முகக் குரங்கு வளங்காப்பு

November 11 , 2025 8 days 58 0
  • தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழுவானது, 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் இரண்டாவது அட்டவணையின் கீழ் செம்முகக் குரங்குகளை (ரீசஸ் மக்காக்) மீண்டும் சேர்ப்பதற்குப் பரிந்துரைத்துள்ளது.
  • இரண்டாம் அட்டவணையில் இதனை மீண்டும் சேர்ப்பது சட்டப்பூர்வப் பாதுகாப்பை மீண்டும் கொண்டு வரும் மற்றும் அந்த இனங்களின் மீதான அறிவியல் பூர்வ மேலாண்மையை ஒழுங்குபடுத்தும்.
  • இந்த நடவடிக்கையானது அவற்றைச் சட்டவிரோதமாக பிடிப்பது, கொடுமைப் படுத்துதல் மற்றும் மோசமாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றினைத் தடுப்பதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் இந்தப் பரிந்துரையை ஆதரிக்கின்றன.
  • இந்த உயிரினங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை என்றும், மோதல் மேலாண்மை காரணங்களுக்காகவும், மற்ற மாநிலங்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்தன.
  • ஒரு குறிப்பிட்டத் தளம் சார்ந்த மேலாண்மை மற்றும் வளங்காப்புத் திட்டங்களைக் கோட்ட வன அதிகாரிகள் மற்றும் வனத் துணை வளங்காவலர்கள் தயாரிக்க வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்