TNPSC Thervupettagam

செயற்கை உலோகம் அடிப்படையிலான நானோசைம்

June 7 , 2025 6 days 38 0
  • இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் (IISc) ஆராய்ச்சியாளர்கள் ஒரு செயற்கை உலோகம் அடிப்படையிலான நானோசைமை உருவாக்கியுள்ளனர்.
  • நுரையீரல் தக்கையடைப்பு (த்ரோம்போம்போலிசம் - PTE) போன்ற நிலைமைகளால் ஏற்படும் அசாதாரண இரத்த உறைதலைக் கட்டுப்படுத்துவதற்கு வேண்டி இதைப் பயன்படுத்தலாம்.
  • சாதாரணச் சூழ்நிலைகளில், ஒரு இரத்த நாளம் காயமடைந்தால், இரத்தத் தட்டுகள் (பிளேட்லெட்டுகள்) எனப்படும் சிறப்பு இரத்த அணுக்கள் செயல்படுத்தப்பட்டு, அந்த நாளத்தினைச் சுற்றி ஒன்றாகக் குவிந்து அப்பாதுகாப்பு இரத்த உறைவுகளை அவை உருவாக்குகின்றன.
  • இந்த ஒரு செயல்முறையானது, இரத்த உறைவு அடுக்கு (ஹீமோஸ்டாஸிஸ்) என்று அழைக்கப் படுகிறது.
  • ஆனால், PTE போன்ற சில நிலைமைகள் அல்லது COVID-19 போன்ற நோய்கள், பிளேட் லெட்டுகளை அதிகமாகச் செயல்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.
  • இது இரத்த நாளத்தில் மிக அதிகப்படியான கட்டிகள் உருவாகத் தூண்டுவதோடு, இது நோயுற்றத் தன்மை மற்றும் உயிரிழப்புக்கான முக்கிய காரணமான த்ரோம்போசிஸ் நிலைக்குப் பங்களிக்கிறது.
  • ஒரு கோள வடிவ வனேடியம் பென்டாக்சைடு (V2O5) நானோசைம்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க என்று குளுடாதயோன் பெராக்ஸிடேஸ் எனப்படும் இயற்கை ஆக்ஸிஜனேற்ற நொதியைப் பிரதிபலிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்