நிதி ஆயோக் அமைப்பானது, புது டெல்லியில் "AI for Inclusive Societal Development" என்ற கருத்துருவில் ஒரு செயல் திட்டத்தினை வெளியிட்டது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வளர்ந்து வரும் புதியத் தொழில்நுட்பங்கள் இந்தியாவின் 490 மில்லியன் முறைசாரா தொழிலாளர்களுக்கு எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பதில் இந்த ஆய்வு கவனம் செலுத்துகிறது.
முறைசாரா துறையானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50 சதவீதத்தைப் பங்களிக்கிறது என்றாலும், அத்துறையில் முறையான பாதுகாப்பு மற்றும் வாய்ப்புகள் இல்லை.
முறைசாரா தொழிலாளர்களுக்கு உள்ளடக்கிய வகையிலான செயற்கை நுண்ணறிவு சூழல் அமைப்பை உருவாக்க டிஜிட்டல் ஷ்ராம்சேது என்ற தேசியத் திட்டத்தினை நிதி ஆயோக் முன்மொழிந்தது.
நிதியியல் பாதுகாப்பின்மை மற்றும் திறன் இல்லாமை போன்ற சவால்களை எதிர் கொள்வதற்காக இந்தத் திட்டமானது செயற்கை நுண்ணறிவு, தொடர் சங்கிலித் தொழில் நுட்பம் மற்றும் அதிவேகத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்.
திட்ட அமலாக்கம் இல்லாமல், முறைசாரா தொழிலாளர்களின் சராசரி வருடாந்திர வருமானம் ஆனது 2047 ஆம் ஆண்டில், 14,500 டாலர் என்ற அதிகபட்ச வருமான வரம்பிற்கு கீழே 6,000 டாலராக இருக்கும்.