அனைத்து வகையான செயற்கை கஞ்சாப் பொருட்களுக்குத் தடை விதித்த முதல் நாடு சீனாவாகும்.
போதைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் கடத்தல்களைத் தடுக்கும் முயற்சியில் சீன அரசானது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இவை மின்னணு சிகரெட்டுகளில் சிகரெட் எண்ணெய்யாக உபயோகிக்கப் படுகின்றன என்பதால் செயற்கை கஞ்சாக்கள் அதிகளவில்மறைக்கப் படுகின்றன.
செயற்கை கஞ்சாப் பொருட்கள் என்பவை மிகவும் தவறான முறையில் பயன்படுத்தப் படுகின்ற மனோவியலைப் பாதிக்கும் ஒரு புதிய பொருளாகும்.
இவை தவறாகப் பயன்படுத்தப்படுவதால், வேண்டுமென்றேக் காயங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் மற்றும் முறையற்ற வகையில் வாகனம் ஓட்டுதல் போன்ற சம்பவங்களை அதிகரிக்கச் செய்து சமுதாயத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.