TNPSC Thervupettagam

செயல்பாடு மற்றும் ஆராய்ச்சியை நோக்கி பொலிவுறு நகரங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் (SAAR) திட்டம்

January 14 , 2022 1261 days 593 0
  • செயல்பாடு மற்றும் ஆராய்ச்சியை நோக்கிப் பொலிவுறு நகரங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் (SAAR - Smart Cities and Academia Towards Action and Research) எனும் திட்டமானது பொலிவுறு நகரங்கள் திட்டத்தினால் தொடங்கப்பட்டது.
  • பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை இது ஆவணப் படுத்தும்.
  • இது ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும்.
  • SAAR திட்டமானது பிரதானமாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகிறது.
  • தேசிய நகர்ப்புற விவகாரங்கள் கல்வி நிறுவனம் மற்றும் நாட்டின் பிற முதன்மையான கல்வி நிறுவனங்கள் ஆகியவை இந்த அமைச்சகத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஈடுபட உள்ளன.
  • இதில் 15 முதன்மையான கட்டிடக்கலை நிறுவனங்களும் உள்ளடங்கும்.
  • தொடக்கத்தில், 75 நகர்ப்புற திட்டங்களுக்கான பட்டியலை SAAR தயாரிக்க உள்ளது.
  • பல்வேறு பொலிவுறு நகரத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதும், மற்றும் பிரதமரின் தொகுதியாகவும் திகழும் வாரணாசி நகரம், SAAR திட்டத்தில் இணையத் தவறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்