TNPSC Thervupettagam

சைகோவ்-டி தடுப்பு மருந்து

June 25 , 2021 1454 days 586 0
  • இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான சைடஸ் கேடிலா ‘சைகோவ்-டி’ எனப்படும் தனது கொரோனா தடுப்பு மருந்தின் அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக வேண்டி இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்க உள்ளது.
  • அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் இது உலகின் முதலாவது டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பு மருந்தாக விளங்கும்.
  • இத்துடன், நாட்டில் பயன்பாட்டிலிருக்கும் தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கையானது 4 ஆக உயரும்.
  • சைகோவ்-டி ஆனது ஊசி வழியே அல்லாமல் ஜெட் உட்செலுத்தி எனும் ஒரு உபகரணத்தின் மூலம் உட்செலுத்தப்படும் ஒரு நோய்த் தடுப்பு மருந்தாகும்.
  • இது மூன்று தவணைகளில் செலுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்