TNPSC Thervupettagam

சைனோவாக் – உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல்

June 6 , 2021 1535 days 664 0
  • சீனாவின் சைனோவாக் பயோடெக் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பு மருந்தினை உலகளவில் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பானது ஒப்புதல் வழங்கி உள்ளது.
  • 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மருந்தினை உபயோகிக்கக் கோரி உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
  • இந்த மருந்தினை இரண்டு தவணைகளில் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் இதற்கான கால இடைவெளியானது 2 முதல் 4 வாரங்களாகும்.
  • அவசரகாலப் பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெற்ற மற்ற தடுப்பு மருந்துகள் பைசர் மற்றும் பயோன்டெக் SE, ஜான்சன் & ஜான்சன், ஆஸ்ட்ரா செனிகா மற்றும் மாடெர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்