ஒன்றியப் பிரதேசமான லடாக்கின் லே பகுதியில் சோவா-ரிக்பாவுக்கான தேசிய நிறுவனம் நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிறுவனம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி தேசிய நிறுவனமாக செயல்படும்.
சோவா-ரிக்பா என்பது இந்தியாவில் உள்ள இமயமலைப் பகுதியின் ஒரு பாரம்பரிய மருத்துவ முறையாகும்.
இந்த மருத்துவ முறையானது சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், டார்ஜிலிங் (மேற்கு வங்கம்), இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் ஒன்றியப் பிரதேசங்களில் பிரபலமாக நடைமுறையில் உள்ளது.