TNPSC Thervupettagam

ஜப்பானுக்கு இந்தியாவின் அருமண் தனிம ஏற்றுமதி

June 18 , 2025 17 days 51 0
  • ஜப்பானுக்கு மேற்கொள்ளப்படும் அருமண் தனிம ஏற்றுமதி தொடர்பான 13 ஆண்டு கால ஒப்பந்தத்தினை நிறுத்தி வைக்குமாறு IREL (Indian Rare Earths Limited) எனும் அரசுக்குச் சொந்தமானச் சுரங்க நிறுவனத்தினை இந்திய அரசு கோரியுள்ளது.
  • குறிப்பாக மின்சார வாகன மோட்டார்களுக்கான காந்தங்களில் பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியப் பொருளான நியோடைமியத்தின் ஏற்றுமதியை நிறுத்துமாறு, IREL நிறுவனத்திடம் அரசாங்கம் கோரியுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டு ஒரு அரசாங்க ஒப்பந்தத்தின் கீழ், IREL ஆனது டொயோட்சு ரேர் எர்த் இந்தியா என்ற நிறுவனத்திற்கு அருமண் தனிமங்களை வழங்குகிறது.
  • சீன நாடானது, ஏப்ரல் மாதம் முதல் அதன் அருமண் பொருட்களின் ஏற்றுமதியைக் குறைத்து, அதனால் உலகளவில் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் உயர்தொழில் நுட்ப உற்பத்தியாளர்களுக்கு நெருக்கடி அளித்துள்ளது.
  • இந்தியா 6.9 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்ற ஒரு அளவில் உலகின் ஐந்தாவது பெரிய அருமண் இருப்புக்களை கொண்டுள்ளது.
  • ஆனால் உள்நாட்டில் காந்த உற்பத்தி மேற்கொள்ளப் படுவதில்லை.
  • இந்தியா இறக்குமதி செய்யப்பட்ட, முக்கியமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட காந்தங்களையே சார்ந்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில், இந்தியா 53,748 மெட்ரிக் டன் அருமண் காந்தங்களை இறக்குமதி செய்தது.
  • இந்த IREL நிறுவனமானது, கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் ஓர் அருமண் மீதான அகழ்ந்தெடுப்பு ஆலையையும், தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் சுத்திகரிப்புப் பிரிவையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்