ஜப்பான் நாட்டின் பாராளுமன்றம் ஆனது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் கார்பன் உமிழ்வு வர்த்தக திட்டத்தில் சேர கடமைப் படுத்தும் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.
திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், ஆண்டிற்கு 100,000 டன் கார்பன் டை ஆக்சைடு அல்லது அதற்கு மேல் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்தப் பசுமை மாற்ற உமிழ்வு வர்த்தக அமைப்பில் சேர வேண்டும்.
உள்நாட்டுப் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் நிறுவனங்கள் சுமார் 60% என்ற அளவிற்குப் பங்ககளிப்பதாக அரசாங்கம் மதிப்பிடுகிறது.
வர்த்தக அமைப்பின் கீழ், நிறுவனங்களுக்கு மிகவும் அதிகபட்ச உமிழ்வு ஒதுக்கீடு வழங்கப் படும்.
அந்த நிறுவனங்கள் வரம்பிற்கு மேல் உள்ள எந்தவொரு உமிழ்விற்கும் சந்தையில் கார்பன் வரவுகளை வாங்க வேண்டும்.