ஜூலை 01 ஆம் தேதியிலிருந்து தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகமுள்ள 255 மாவட்டங்களில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்ப் பாதுகாப்பு முயற்சிகளை துரிதப்படுத்துவதற்காக ஜல் சக்தி அபியான் என்றப் பிரச்சாரத்தைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட கிராம சுவராஜ் அபியான் மாதிரியைப் பின்பற்றி இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட இருக்கின்றது.
இந்தப் பிரச்சாரம் ஜூலை 01 முதல் செப்டம்பர் 15 வரை தென்மேற்குப் பருவமழை பெறும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட விருக்கின்றது.
பருவமழை திரும்புதல்/பின்வாங்குதல் அல்லது வட கிழக்குப் பருவமழையின் போது மழை பெறும் மாநிலங்களில் அக்டோபர் 01 முதல் நவம்பர் 30 வரை இப்பிரச்சாரம் செயல்படுத்தப்படும்.
Indiawater.gov.in என்ற இணைய தளத்தில் உள்ள நிகழ்நேர கட்டுப்பாட்டகம் மற்றும் கைபேசி செயலிகளின் மூலம் நிகழ்நேரத்தில் இதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட விருக்கின்றன.