ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பு ஆகியவை இணைந்து ஜல் ஜன் அபியான் பிரச்சாரத்தினைச் செயல்படுத்த உள்ளன.
இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் நீர் வளங்காப்பு ஆகும்.
இந்த எட்டு மாத காலப் பிரச்சாரத்தின் போது, இந்த அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தண்ணீரைப் பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்பு உணர்வுப் பிரச்சாரத்தினை மேற்கொள்வர்.
புதிய நீர்நிலைகளை அமைக்கச் செய்வதிலும், ஏற்கனவே உள்ள 5,000க்கும் மேற்பட்ட நீர் நிலைகளைப் பாதுகாப்பதிலும் இந்த அமைப்பு கவனம் செலுத்த உள்ளது.
இந்தப் பிரச்சாரமானது குறைந்தது பத்து கோடி மக்களைச் சென்றடைவதையும், 10,000 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதையும் இலக்காகக் கொண்டு உள்ளது.