ஜான்சன் & ஜான்சன் தடுப்பு மருந்தின் அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதி
August 10 , 2021 1467 days 581 0
இந்தியாவில் ஜான்சன் & ஜான்சன் (Johnson and Johnson’s) நிறுவனத்தின் கோவிட்-19 ஒற்றைத் தவணைத் தடுப்பு மருந்தின் அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதனோடுச் சேர்த்து இந்தியாவில் தற்போது ஐந்து தடுப்பு மருந்துகள் அவசரகாலப் பயன்பாட்டில் உள்ளன.
ஜான்சன் கோவிட் – 19 தடுப்பு மருந்து (Janssen COVID-19) எனவும் அழைக்கப்படும் இந்தத் தடுப்பு மருந்தானது நெதர்லாந்தில் லைடன் என்னுமிடத்திலுள்ள ஜான்சன் வேக்சின்ஸ் (Janssen Vaccines) என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டதாகும்.