ஜிம்பாப்வே யானைகளைக் கொல்லுதல் 2025
June 15 , 2025
15 hrs 0 min
17
- ஜிம்பாப்வே சேவ் வேலி என்ற காப்பகத்தில் குறைந்தது 50 யானைகளை கொல்லத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
- இந்தக் காப்பகத்தில் தற்போது சுமார் 2,550 யானைகள் உள்ளதாக ஜிம்பாப்வே பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு மேலாண்மை ஆணையம் (ஜிம்பார்க்ஸ்) தெரிவித்து உள்ளது.
- இந்த எண்ணிக்கையானது, 800 என்ற அதன் சுற்றுச்சூழல் தாங்கு திறனை விட மிகவும் அதிகமாக உள்ளது.
- இதில் கொல்லப்படும் யானைகளின் இறைச்சியானது அங்கு உள்ளூர் சமூகங்களிடம் விநியோகிக்கப் படும்.
- போட்ஸ்வானா என்ற நாட்டிற்ற்கு அடுத்தபடியாக, உலகின் மிகப்பெரிய யானைகள் எண்ணிக்கையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஜிம்பாப்வே உள்ளது.
- சமீபத்திய ஆண்டுகளில் ஜிம்பாப்வே யானைகளைக் கொல்லும் பணியில் ஈடுபடுவது இது இரண்டாவது முறையாகும்.

Post Views:
17