TNPSC Thervupettagam

ஜியோ பார்சி திட்டம்

October 28 , 2019 2079 days 767 0
  • 2013 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஜியோ பார்சி திட்டத்தின் விளைவாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 214 குழந்தைப் பிறப்புகள் செயற்கை கருத்தரிப்பு நுட்பங்கள் மூலம் பிறந்துள்ளன.
  • இந்தத் திட்டமானது பண ஊக்கத் தொகை அளிப்பதன் மூலம் குறைந்து வரும் பார்சி இன மக்கள்தொகையைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.
  • மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, பார்சி மக்கள் தொகை 1941 ஆம் ஆண்டில் சுமார் 114,000 ஆக இருந்தது. அது 2011 ஆம் ஆண்டில் 57,264 ஆக குறைந்துள்ளது.
  • நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பார்சி மக்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் பார்சி மக்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்