தமிழ் கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான ஆர். வைரமுத்துவுக்கு புது தில்லியில் 60-வது ஞானபீட விருது (2025) வழங்கப்பட்டது.
அகிலன் (1975) மற்றும் ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்குப் பிறகு, 24 ஆண்டு கால இடைவெளிக்குப் பின் இந்த விருதைப் பெறும் மூன்றாவது தமிழ் இலக்கிய ஆளுமை இவராவார்.
அவர் தனது 'கள்ளிக்காட்டு இதிகாசம்' புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.
1961 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஞானபீட விருது இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாகும் என்பதுடன் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப் பட்டுள்ள எந்தவொரு மொழியிலும் இலக்கியத்திற்கான வாழ்நாள் பங்களிப்பிற்காக இது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
இந்திய மொழிகள், இலக்கியம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக 1944 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பாரதிய ஞானபீடம்' என்ற அமைப்பால் இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது ₹11 லட்சம் ரொக்கப் பரிசு, வாக்தேவி தேவியின் வெண்கலச் சிலை மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது.