பிப்ரவரி 22, 2026 அன்று ஷிமானே மாகாணத்தில் நடைபெற்ற ஜப்பானின் டகேஷிமா தின நிகழ்வுக்கு எதிராக தென் கொரியா ஒரு இராஜதந்திர எதிர்ப்பை பதிவு செய்தது.
இந்தத் தீவுகள் ஜப்பானில் தகேஷிமா என்றும் தென் கொரியாவில் டோக்டோ என்றும் அழைக்கப்படுகின்றன.
அவை ஜப்பான் கடலில் அமைந்துள்ளன என்ற ஒரு நிலையில் இதை தென் கொரியா கிழக்கு கடல் என்று குறிப்பிடுகிறது.
இந்தப் பிரதேசம் டோங்டோ மற்றும் சியோடோ என்ற இரண்டு முக்கிய தீவுகளையும், பல சிறிய பாறைகளையும் கொண்டுள்ளது.
தென் கொரியா 1954 ஆம் ஆண்டு முதல் காவல்துறையினரை நியமித்து இத்தீவுகளின் மீது கட்டுப்பாட்டைப் பராமரித்து வருகிறது.
ஜப்பான் இந்தத் தீவுகளை ஷிமானே மாகாணத்தின் ஒரு பகுதியாகக் கூறி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 22 அன்று தாகேஷிமா தினத்தைக் கடைப்பிடிக்கிறது.
இதைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் மீன்வளத்தால் நிறைந்துள்ளன என்ற ஒரு நிலையில் அவற்றில் குறிப்பிடத் தக்க அளவு எரிவாயு ஹைட்ரேட்டுகள் இருப்பதாக நம்பப் படுகிறது.