படுபித்ரி V. சிவபிரசாத் (தேசிய உயிரியல் அறிவியல் மையம்), பாலசுப்பிரமணியன் கோபால் மற்றும் அம்பரீஷ் கோஷ் (இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்) ஆகிய பெங்களூருவைச் சேர்ந்த மூன்று அறிவியலாளர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான டாடா மாற்றமிகு புதுமைக்கான பரிசை வென்றனர்.
உணவுப் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் சுகாதார நலப் பராமரிப்பு ஆகியவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்டதற்காக அவர்களுக்கு முறையே விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.
தங்கள் ஆராய்ச்சி மற்றும் அதன் நிஜ உலகத் தாக்கத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொருவருக்கும் 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.
சிவபிரசாத் மன அழுத்த சகிப்புத்தன்மை மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்த அரிசியில் மேல்மரபியல் (எபிஜெனெடிக்) பொறியியலில் பணியாற்றுகிறார்.
கோபால் உயிரி பொறியியல் நுட்பத்திற்குட்படுத்தப்பட்ட ஈ. கோலையைப் பயன்படுத்தி நிலையான இரசாயன உற்பத்தியை உருவாக்கினார் என்ற நிலையில் மேலும் கோஷ் இலக்கு சார்ந்த புற்றுநோய் சிகிச்சைக்கு காந்தத் திறன் கொண்ட நுண் எந்திரங்களைப் பயன்படுத்தினார்.