டிஜிட்டல் அச்சுறுத்தல் அறிக்கை 2025-26-ஆம் ஆண்டின் 2-ஆம் பதிப்பு
July 25 , 2026 2 days 78 0
இது மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY), CERT In, CSIRT Fin, மற்றும் SISA ஆகியவற்றுடன் இணைந்து வெளியிடப்படுகிறது.
இந்த அறிக்கை, இந்தியாவின் BFSI மற்றும் பணம் செலுத்தும் சூழல் அமைப்பில் பாதுகாப்பு மற்றும் மீள்திறனை வலுப்படுத்த, செயற்கை நுண்ணறிவு சமச்சீரற்ற தன்மை மற்றும் வளர்ந்து வரும் இணையப் போக்குகளை எடுத்துக்காட்டுகிறது.
வங்கி, காப்பீடு மற்றும் டிஜிட்டல் பணம் செலுத்துதல்களைப் பாதிக்கும் அச்சுறுத்தல்கள் குறித்த தெளிவான கண்ணோட்டத்தை இந்த அறிக்கை நிதி நிறுவனங்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் இணையப் பாதுகாப்புத் தலைவர்களுக்கு வழங்குகிறது.
SISA என்பது பணம் செலுத்தும் சூழல் அமைப்புக்கான உலகளாவிய இணையப் பாதுகாப்புத் தலைவராகும்.
CERT-In என்பது கணினிப் பாதுகாப்புச் சம்பவங்கள் நிகழும்போது அவற்றுக்குப் பதிலளிப்பதற்கான தேசிய ஒருங்கிணைப்பு முகமையாகும்.
இது தகவல் தொழில்நுட்பத் திருத்தச் சட்டம் 2008-இன் கீழ் இருந்தது.