மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் “டிஜிட்டல் கிராம குருவாராவைத்” திறந்து வைத்தார்.
இந்தத் தொடக்க விழாவின் போது, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அனைத்து கிராமங்களுக்கும் இலவச வைஃபை (அருகலை) சேவைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பாரத்நெட் என்ற திட்டத்தின் கீழ் இலவச வைஃபை (அருகலை) சேவைகள் அறிவிக்கப் படுகின்றன.
பாரத்நெட் திட்டம்
இந்த முயற்சியானது 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
கிராமப் புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் எதிர்காலத்தில் இணையத்தின் வேகத்தை சுமார் 2 முதல் 20 Mbps வரை உயர்த்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டமானது ஒரு தேசிய ஒளியியல் இழை அமைப்புத் திட்டமாகும்.
டிஜிட்டல் இந்தியா வெற்றி பெறுவதற்கு இது ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப் படுகின்றது.
இது மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.