பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்சார்த்த அபியான் திட்டத்தின் (PMGDISHA - Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan) கீழ் ஏறத்தாழ 2.22 கோடி கிராம மக்களுக்கு டிஜிட்டல் கல்வி வழங்கப்பட்டுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு 636 பயிற்சியளிக்கும் பங்குதாரர்களைப் பதிவு செய்துள்ளது.
கிராமப்புற மக்கள் 3.5 இலட்சம் பொதுச் சேவை மையங்களில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய இரயில்வே, கிராமப்புற நிலையில் ஒளியியல் இழை அமைப்பை ஏற்படுத்தி, இத்திட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.