தேசிய மகளிர் ஆணையம் ஆனது சைபர்பீஸ் அறக்கட்டளை மற்றும் மெட்டா ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
இது பெண்களை எண்ணிம முறையில் திறமையானவர்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துவதோடு இணையத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு சட்டவிரோத அல்லது தேவையற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு விழிப்புணர்வினை வழங்குகிறது.
இது இணைய வெளியில், பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிமத் திறனை மேம்படுத்துதல் மற்றும் அதற்கான அதிகாரமளித்தல் தொடர்பான ஒரு இந்திய அளவிலான திட்டமாகும்.