TNPSC Thervupettagam

டிஜிட்டல் பலகை நடவடிக்கை

February 27 , 2019 2320 days 771 0
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் நாட்டில் கல்விக்கான தரத்தை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திட டிஜிட்டல் பலகை நடவடிக்கை எனும் திட்டத்தைத் துவக்கி வைத்தார்.
  • கல்வி கற்பதையும் கற்பித்தலையும் ஊடாடும் விதத்திலும், சுண்டி இழுக்கும் விதத்தில் கல்வி கற்பதை ஒரு வழிகாட்டும் நடைமுறையாக பிரபலப்படுத்துவதிலும் டிஜிட்டல் பலகை நடவடிக்கை ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும்.
  • பள்ளிகளில் சிறந்த டிஜிட்டல் கல்வியை வழங்கிட இத்திட்டம் கரும்பலகை நடவடிக்கை என்ற திட்டத்தின் மாதிரி வடிவில் துவங்கிடப் பட்டிருக்கின்றது.
  • உயர்கல்வி நிறுவனங்களில் இத்திட்டத்தை அமல்படுத்தும் நிறுவனமாக பல்கலைக்கழக மானியக்குழு இருக்கும்.
  • மாநில அரசின் ஒத்துழைப்புடன் மத்திய அரசானது பள்ளிகளில் இத்திட்டத்தை நிறைவேற்றும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்