ஹஜ் பயணம் மேற்கொள்ளும் புனித யாத்ரீகர்களுக்கான முழு செயல்முறையையும் முற்றிலும் டிஜிட்டல்மயமாக்கம் செய்த முதலாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
நிகழ்நேர (ஆன்லைன்) விண்ணப்பம், மின்னணு நுழைவு இசைவு, ஹஜ் கைபேசி செயலி, ‘இ-மாசிஹா’ சுகாதார வசதி, “மின்னணு முறையிலான பயணச் சுமை குறியிடல்” ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
2020 ஆம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 2 லட்சம் இந்திய முஸ்லிம்கள் மெக்கா மற்றும் மெதினா ஆகிய நகரங்களில் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து தொடர்பான தகவல்களை இந்தியாவிலேயே பெற இருக்கின்றனர்.
மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி என்பவர் இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இருதரப்பு வருடாந்திர 2020 ஆம் ஆண்டு ஹஜ் ஒப்பந்தத்தில் ஜெட்டாஹ் நகரில் கையெழுத்திட்டார்.