கோட்பாட்டு இயற்பியலில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 2026 ஆம் ஆண்டிற்கான டிராக் பதக்கத்தின் (Dirac Medal) இணை-பெறுநராக இந்திய இயற்பியலாளர் தீபக் தர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இப்பதக்கமானது இத்தாலியில் உள்ள அப்துஸ் சலாம் கோட்பாட்டு இயற்பியலுக்கான சர்வதேச மையத்தால் (ICTP) 1985 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
2022 ஆம் ஆண்டில் போல்ட்ஸ்மேன் பதக்கத்தைப் (Boltzmann Medal) பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தீபக் தர் பெற்றார்.
அவர் இப்போது டிராக் மற்றும் போல்ட்ஸ்மேன் ஆகிய இரண்டு பதக்கங்களையும் பெற்ற 10 பேரில் ஒருவராக உள்ளார்.
எளிமையான தொடர்புகள் எவ்வாறு பெரிய அமைப்புகளில் சிக்கலான நடத்தையை உருவாக்கும் என்பதை இவரது ஆராய்ச்சி கண்டறிகிறது.