TNPSC Thervupettagam

டீசல் வாகனங்களின் பயன்பாடுகளுக்கு முழுத் தடை

May 12 , 2023 820 days 342 0
  • பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்ட ஒரு குழுவானது, 2027 ஆம் ஆண்டிற்குள் டீசல் எரிபொருளில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குப் பரிந்துரைத்துள்ளது.
  • அதற்குப் பதிலாக மின்சார மற்றும் எரிவாயு ஆற்றலில் இயங்கும் வாகனங்களுக்கு அது மாறுமாறு பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
  • 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பல்வேறு நகரங்களுக்கு இது பொருந்தும்.
  • 2070 ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வு என்ற தனது ஒரு இலக்கினை அடைவதற்காக இந்தியா தனது 40% மின்சார உற்பத்தியினைப் புதுப்பிக்கவல்ல ஆற்றல்களிலிருந்துப் பெற வேண்டும்.
  • இந்தியாவின் ஆற்றல் பயன்பாட்டுச் சேர்க்கையில் தற்போது 6.2% ஆக உள்ள எரிவாயுவின் பங்கினை, 2030 ஆம் ஆண்டிற்குள் 15% ஆக உயர்த்துவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்