இந்தியத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட ஒரு அரசியல் அமர்வானது, டெல்லி அரசு தொடர்பாக 8 ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு சர்ச்சையினை முடித்து வைத்துள்ளது.
தேசியத் தலைநகரப் பிரதேசத்தின் (NCT) சட்டமியற்றும் அதிகாரங்களுக்கு அப்பாற் பட்ட பகுதிகளைத் தவிர்த்து, ஆட்சியை நிர்வகிப்பதில் ஆட்சிப் பணி அதிகாரிகள் மீது டெல்லி சட்டமன்றம் தனது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
டெல்லி அரசின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மூன்று பகுதிகள் பொது ஒழுங்கு, காவல் மற்றும் நிலம் ஆகியனவாகும்.
மத்திய அரசின் சார்பாக டெல்லியில் செயல்படும் துணைநிலை ஆளுநர், ஆளுகை குறித்த பல்வேறு விவகாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் முடிவிற்கு கட்டுப்பட்டவர் ஆவார்.