TNPSC Thervupettagam

டெல்லி நிர்வாகத்திற்கான அவசரச் சட்டம்

May 22 , 2023 734 days 335 0
  • குடியரசுத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரச் சட்டமானது, 1991 ஆம் ஆண்டு டெல்லி தேசியத் தலைநகரப் பகுதி அரசாங்கச் சட்டத்தினை (NCT) திருத்தியமைக்க முயல்கிறது.
  • இது துணைநிலை ஆளுநரை டெல்லி அரசின் நிர்வாகியாக நியமிக்கிறது.
  • டெல்லி நகர அரசாங்கத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளின் பணியிடங்கள் மற்றும் இடமாற்றம் குறித்து அவரே இறுதி முடிவை வழங்குவார்.
  • சட்டங்களை இயற்றுவதற்கும், டெல்லி அரசாங்கத்தில் ஆட்பேருரிமையுடன் நியமிக்கப் பட்ட அதிகாரிகள் மீதான தனது அதிகாரக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கிய மே 11 ஆம் தேதியன்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை இது மாற்றுகிறது.
  • கருத்து வேறுபாடு ஏற்பட்டால், துணைநிலை ஆளுநரின் முடிவே இறுதியானது என்றும் இந்த அவசரச் சட்டம் கூறியுள்ளது.
  • இந்த அவசரச் சட்டமானது, முதன்முறையாக தேசியத் தலைநகர் ஆட்சிப் பணி ஆணையத்தை (NCCSA) நிறுவ முயல்கிறது.
  • டெல்லி முதலமைச்சர் அவர்கள், டெல்லியின் தலைமைச் செயலாளர் மற்றும் முதன்மை உள்துறைச் செயலாளர் ஆகிய இரு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆணையத்தின் தலைவராக செயல்படுவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்