முழுக்க முழுக்க நீர்மின் ஆற்றல் மற்றும் சூரிய சக்தியினால் இயங்கும் நாட்டின் முதல் விமான நிலையம் என்ற பெருமையை டெல்லி விமான நிலையம் பெற்றுள்ளது.
இது 2030 ஆம் ஆண்டிற்குள் நிகர சுழியக் கார்பன் உமிழ்வு நிலையைப் பெற்ற ஒரு விமான நிலையமாக மாறும் உயர் லட்சிய இலக்கை அடைவதற்கான முக்கியப் படி நிலையாகும்.
டெல்லி விமான நிலையத்திற்கு 2036 ஆம் ஆண்டு வரை நீர்மின் ஆற்றல் மூலம் மின்சாரம் வழங்குவதற்காக இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த நீர்மின் உற்பத்தி நிறுவனத்துடன் ஒரு நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் டெல்லி விமான நிலையம் கையெழுத்திட்டுள்ளது.
டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) என்பது GMR உள்கட்டமைப்பு நிறுவனத்தின் தலைமையிலான ஒரு கூட்டமைப்பு ஆகும்.