டெல்லியைத் தாக்கிய தீவிரப் புயல் ஆனது இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) வானிலை ரேடார் வரைபடங்களில் அசாதாரண வடிவத்தில் தோன்றியது.
இந்தப் புயல் ஆனது பிறை அல்லது ஒரு வில் போல இருந்தது.
தொழில்நுட்ப ரீதியாக, புயல்களின் இத்தகைய விளக்கக்காட்சிகள் ஆனது "Bow Echos" என்று அழைக்கப்படுகின்றன.
Bow Echos என்பது பெரும்பாலும் அழிவுகரமான காற்றுப் புயல்களுக்கு முன்னோடியாக உள்ளன.
ஒரு Bow Echos ஆனது 20 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வரை நீண்டிருக்கலாம் என்பதோடு அது மேலும் மூன்று முதல் ஆறு மணி நேரம் வரை நீடிக்கும்.
இந்தச் சொல்லானது 1970 ஆம் ஆண்டுகளில் புயல்களை வகைப்படுத்துவதற்கான அளவை உருவாக்கிய ஜப்பானிய அமெரிக்க வானிலை ஆய்வாளரான டெட் ஃபுஜிடா என்பவரால் முதலில் உருவாக்கப்பட்டது.
மழையால் குளிரூட்டப்பட்டக் காற்று தரையில் இறங்கி, கிடைமட்டமாக பரவுகிறது.
இது நிகழும் போது, மழையால் குளிரூட்டப்பட்டக் காற்றுக்கும் தரையின் மேற்பரப்பில் உள்ள வெப்பமான ஈரப்பதமிக்க காற்றுக்கும் இடையில் காற்று முகப்பு எனப்படும் ஒரு எல்லை உருவாக்கப்படுகிறது.
இந்த முகப்பு ஆனது, வெப்பமான ஈரப் பதமிக்க காற்றை வளிமண்டலத்தில் மேலே தள்ளி, புதிய இடியுடன் கூடிய மழையை உருவாக்குகிறது.
இந்தப் புதிய இடியுடன் கூடிய மழை மிக அதிக மழைப் பொழிவினை உருவாக்குகிறது, இதன் மூலம் அதிக மழையினால் குளிர்ந்த காற்று உருவாகுகிறது, இது காற்று முகப்பு அதன் வலிமையைப் பேண உதவுகிறது.
இந்தச் செயல்முறையானது மீண்டும் மீண்டும் நிகழ்வாதால், புயல்களின் உருவாக்க கோட்டின் பின் பக்கத்தில் காற்று உள்வரும் ஒரு பகுதி உருவாகி, அதை ஒரு வில் போல வளைக்கிறது.
புதிய இடியுடன் கூடிய மழையானது முன்பக்கத்தில் உருவாகி, வலுவான காற்றுடன் இந்த அமைப்பு மேலும் வளரவும் முன்னேறவும் உதவும் வரை இந்த சுழற்சி நீடிக்கும்.