பதின்ம வயதினருக்கான கோவிட்-19 சிகிச்சையில் காப்புரிமை சாராத மருந்தான டோக்லிசுமாப் மருந்தின் அவசரகாலப் பயன்பாட்டிற்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்துள்ளது.
இது ஹைதராபாத்திலுள்ள ஹெட்டீரோ எனும் மருந்து உற்பத்தி நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டதாகும்.
இந்த மருந்தானது டோக்கிரா (Tocira) என்ற பெயரில் கிடைக்கப் பெறும்.
ஹெட்டீரோ நிறுவனத்தின் டோக்லிசுமாப் மருந்தானது ரோச்சே நிறுவனத்தின் ஆக்டிமெரா/ரோஆக்டிம்ரா மருந்தின் உயிரி மாதிரியை ஒத்தப் பதிப்பாகும் (bio-similar version).