TNPSC Thervupettagam

தகவல் சமூகம் மீதான உலக மாநாடு மன்றம் 2021

March 26 , 2021 1597 days 767 0
  • தகவல் சமூகம் மீதான உலக மாநாடு மன்றம் 2021 (World Summit on the Information Society – Wsis) என்ற மாநாடானது “வளர்ச்சிக்கான தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பச் சமுதாயத்தின் உலகின் மிகப்பெரிய வருடாந்திர ஒன்றிணைவாகும்.”
  • இம்மன்றம் யுனெஸ்கோ, ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம், ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு மற்றும் சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்பட்டது.
  • பாரத்நெட் என்ற முதன்மை திட்டத்தின் கீழ், 4,00,000 கி.மீக்கும் மேலான நீளத்திற்கு ஒளியிழை கம்பி வடங்களை அமைப்பதன் மூலம் செயற்கைக்கோள் தொடர்பு சேவைகளைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட 6,00,000 கிராமங்கள் இணைக்கப் படுகின்றன என்று தொலைதொடர்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
  • கடலுக்கடியில் மூழ்கிய கம்பிவட அமைப்புகள் மூலம் சிறிய மற்றும் தொலைதூர தீவுகளான அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் மற்றும் இதர அணுக இயலாத பகுதிகள் அரசின் நிதியுதவியுடன் இணைக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்