TNPSC Thervupettagam

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவின் கீழான முதல் தகவல் அறிக்கை

July 18 , 2021 1419 days 805 0
  • தனது அதிகார வரம்பின் கீழ் உள்ள காவல் நிலையங்களில் 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66A பிரிவின் கீழ் பதிவான அனைத்து முதல் தகவல் அறிக்கையினையும் திரும்பப் பெற கோருமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
  • மேலும் நீக்கப்பட்ட 66A பிரிவின் கீழ் வழக்குப் பதிவு எதுவும் செய்யக்கூடாது எனவும் அரசு அறிவித்துள்ளது.
  • தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவானது, கணினி (அ) கைபேசி அல்லது வரைப்பட்டிகை போன்ற வேறு பிற தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி அவமதிப்புகுறுஞ்செய்திகளை அனுப்பும் நபர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கிறது.
  • இது தெளிவற்றது மற்றும் ஆதிக்கம் மிக்கதுஎன்று குறிப்பிடப்பட்டதையடுத்து 2015 ஆண்டு மார்ச் 24 அன்று 66A பிரிவினை ரத்து செய்து உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
  • பல குற்றமற்றவர்களை கைது செய்ய நேர்வதன் காரணமாக இது கடுமையான சட்டம் என்று கூறப் படுகிறது.
  • இது 2015 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று ஸ்ரேயா சிங்கால் Vs இந்திய ஒன்றியம் என்ற வழக்கில் அரசியலமைப்பிற்குப் புறம்பானது என தீர்ப்பளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்