தடையற்ற (திறந்த நிலை) தரவு வாரம் ஆனது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.
இது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 17 முதல் 21 வரையில் கொண்டாடப்படுகிறது.
இது நாட்டின் நகர்ப்புறச் சூழலில் புத்தாக்கத்தினை ஊக்குவிக்கிறது.
இந்த ஒரு வார கால அளவிலான கொண்டாட்டத்தின் போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது, பொலிவுறு நகரங்களைப் பற்றிய உயர்தர வலைப் பதிவுகள் மற்றும் தரவுத் தொகுதிகளை வெளியிட்டது.
இந்தத் தரவுகள் ஒரு திறந்தநிலை தரவு தளத்தில் வெளியிடப்பட உள்ளன.