பாகிஸ்தானியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தட்சசீலாவிற்கு அருகிலுள்ள யுனெஸ்கோ அமைப்பினால் பட்டியலிடப் பட்ட இடத்தில் அரிய நாணயங்கள் மற்றும் அலங்கார கற்களைக் கண்டெடுத்துள்ளனர்.
ஆரம்பகால நகர்ப்புறக் குடியேற்றத்தின் மிக முக்கியமான தொல்பொருள் தளமான பண்டைய பீர் மௌண்டில் இவை கண்டெடுக்கப் பட்டன.
லேபிஸ் லாசுலி என அடையாளம் காணப்பட்ட இந்த அலங்காரக் கற்கள் கிமு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.
இந்த இடத்தில் காணப்படும் வெண்கல நாணயங்கள் குஷான வம்சத்தைச் சேர்ந்தவை மற்றும் கிபி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.
குஷான காலத்தின் ஆட்சியாளரான பேரரசர் வாசுதேவரின் ஒரு உருவமானது இந்த நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ளன.