தண்ணீர்ப் பற்றாக்குறைக் குறியீட்டின் படி, நாட்டில் உள்ள 20 மிகப் பெரிய நகரங்களில் 11 நகரங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறை அபாயத்தை எதிர் கொண்டிருக்கின்றன.
இக்குறியீடானது இலண்டனில் உள்ள அபாயப் பகுப்பாய்வு நிறுவனமான வெரிஸ்க் மேப்பிள் குரோப்டினால் தயாரிக்கப்பட்டது. இது உலகின் 46-வது அபாயமுள்ள நாடாக இந்தியாவைப் பட்டியலிட்டுள்ளது.
இந்தக் குறியீடானது வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வேளாண் துறை ஆகியவற்றின் தண்ணீர் நுகர்வு விகிதம் மற்றும் நதிகள், ஏரிகள், ஓடைகள் ஆகியவற்றின் நீர் வளங்கள் ஆகியவற்றைக் கணக்கிடுகின்றது.
தில்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், நாசிக், ஜெய்ப்பூர், அகமதாபாத் மற்றும் இந்தூர் ஆகிய நகரங்கள் “மிகவும் அபாயத்தை” எதிர் கொண்டிருக்கின்ற நகரங்களாகும்.