TNPSC Thervupettagam

தனிநபர் சுகாதார நலன் மீதான அரசின் செலவினம்

September 18 , 2022 1022 days 434 0
  • 2013-14 ஆம் ஆண்டிலிருந்து அரசின் தனிநபர் மருத்துவச் செலவினமானது 74 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 2018-19 ஆம் ஆண்டிற்கான தேசியச் சுகாதாரக் கணக்கு மதிப்பீடுகளின் படி 2013-14 ஆம் ஆண்டில் அரசின் தனிநபர் செலவினம் 1042 ரூபாய் ஆகும்.
  • இது ஆயிரத்து எண்ணூற்றுப் பதினைந்து ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • நாட்டில் சுகாதாரத்திற்கான ஒட்டு மொத்தச் செலவினத்தில் அரசின் பங்கு படிப் படியாக அதிகரித்து வருகிறது.
  • 2013-14 ஆம் ஆண்டில் 23.2 சதவீதமாக இருந்த நடப்பு சுகாதாரச் செலவினத்தில் அரசின் பங்கு 2018-19 ஆம் ஆண்டில் 34.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • இந்தக் காலகட்டத்தில் ஆரம்பச் சுகாதார மையத்திற்கான அரசின் சுகாதாரச் செலவினம் 51 சதவீதமாக இருந்தது.
  • 2018-19 ஆம் ஆண்டில் இது 55 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
  • 2013-14 ஆம் ஆண்டில் இருந்து நாட்டில் தனிநபர் செலவினம் எட்டு சதவீதம் குறைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்