TNPSC Thervupettagam

தனிமை நிலை குறித்த WHO அறிக்கை

July 8 , 2025 6 days 39 0
  • சமூக இணைப்புக்கான உலக சுகாதார அமைப்பின் ஆணையமானது, 'From loneliness to social connection: charting a path to healthier societies' என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, 2014 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலகளவில் ஆறு பேரில் ஒருவர் தனிமை நிலையை எதிர்கொண்டனர்.
  • தனிமை நிலையானது ஆண்டுதோறும் சுமார் 871,000, அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 100 உயிரிழப்புகளுக்கு காரணமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இளையோர்கள் (13 முதல் 29 வயதுடையவர்) மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
  • இருதய நோய், பக்கவாதம், மனச்சோர்வு, பதட்டம் மற்றும் முன் கூட்டிய மரணம் ஆகியவை இதனால் ஏற்படும் சுகாதார அபாயங்களில் அடங்கும்.
  • ஆனால் சமூகத்துடன் இணைந்து இருத்தலானது நோய் அபாயத்தைக் குறைத்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆயுட்காலத்தை அதிகரிக்கிறது.
  • இது மோசமான உடல்நலம், குறைந்த வருமானம், தனியாக வாழ்வது மற்றும் அதிகப் படியான திரை நேரம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
  • இந்த அறிக்கையானது கொள்கை மாற்றம், பொது விழிப்புணர்வு, சிறந்த தரவு மற்றும் சமூக வடிவமைப்பு ஆகியவற்றை உருவாக்க கோருகிறது.
  • பாதுகாப்பானப் பொது இடங்கள் மற்றும் உள்ளூர் மகிழ்ச்சிகரச் செயல்பாடுகள் சமூக தனிமைப்படுத்தலைக் குறைக்க உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்